கடையநல்லூர், :கடையநல்லூர் அருகே மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். கடையநல்லூர் அருகே திரிகூடபுரம் சேர்வராயன் கோவில் அருகே உள்ள ஓடை கரையில் சொக்கம்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி மகன் கண்ணுத்துரை(42) அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்தார். இதுதொடர்பாக சொக்கம்பட்டி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின்பேரில் சொக்கம்பட்டி காவல் நிலைய எஸ்.ஐ சிபின்ராஜ் மோன், போலீசார் அவரை கைது செய்தனர். மணல் அள்ளிய லாரியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment