கடையநல்லூரில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 3 பேர் படுகாயம்
 
கடையநல்லூரில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 3 பேர் படுகாயம்
கடையநல்லூர், மார்ச் 14–
தென்காசி– கடையநல்லூர் மெயின் ரோட்டில் நேற்று மாலை ஒருவர் காரை தாறுமாறாக ஓட்டி வந்தார். வேகமாக வந்த அந்த கார் கடையநல்லூர் பல்க் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ரகுமானியாபுரத்தை சேர்ந்த அசன்பிள்ளை என்கிற ராசையா (வயது 38) என்பவர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
அதன் பின்னரும் நிற்காத அந்த கார் கடையநல்லூர் பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தென்காசியை சேர்ந்த முகமது ஹனிபா ( 62) என்பவர் மீது மோதியது அவரும் படுகாயம் அடைந்தார். தொடர்ந்து நிற்காமல் சென்ற கார் சிறிது தூரத்தில் பள்ளிவாசலுக்கு நடந்து சென்று கொண்டிருந்த செய்யதுமசூது என்பவர் மீது மோதியது. இதில் அவர் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
இதன்பின்னர் அந்த காரை ஓட்டி வந்த மர்ம நபர் கடையநல்லூர் நகராட்சி அலுவலகம் அருகே காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த 3 பேரும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கடையநல்லூர் போலீசார் காரை கைப்பற்றி அதை ஓட்டிவந்த நபர் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment