கடையநல்லூரில் மாயமான பள்ளி மாணவன், ஆசிரியையுடன் இருப்பது போல் படங்கள் வெளியாகி உள்ளன. எனவே மாணவன் ஆசிரியை உடன் சென்றுவிட்டானா? என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

மாணவன் மாயம்


நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கருப்பன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரகுமார். இவர் ஒடிசா மாநிலத்தில் உள்ள மத்திய பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி மாரியம்மாள்.

இவர்களுடைய மகன், தென்காசியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 10–ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்தநிலையில் கடந்த 31–ந் தேதி பள்ளிக்கூடத்தில் சிறப்பு வகுப்பு நடைபெறுவதாகவும், அதற்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றான். அதன் பின்னர் அவன் வீடு திரும்ப வில்லை.


அவனது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கடையநல்லூர் போலீசில் மாரியம்மாள் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவனை தேடி வந்தனர்.,

ஆசிரியையுடன் சென்றானா?


இந்த நிலையில் சம்பந்தப்பட்ட மாணவன், அவனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த 23 வயது ஆசிரியையுடன் இருப்பது போன்ற படங்கள் வாட்ஸ்அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரியை தனியாக நிற்பது போன்று ஒரு படமும், அந்த ஆசிரியையை மாணவன் மடியில் வைத்து பிடித்திருப்பது போன்ற கிளுகிளுப்பான படங்களும் பரவி வருகின்றன.

இதையொட்டி அந்த ஆசிரியையும், காணாமல் போன மாணவனுக்கும் இடையே விபரீத காதல் ஏற்பட்டு இருப்பதாகவும், அதனால் 2 பேரும் ஊரை விட்டு ஓடிஇருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் மாணவனும், ஆசிரியையும் தங்களது வீடுகளில் இருந்து ஏராளமான நகை, பணத்தை எடுத்துச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை


ஆனால் கடையநல்லூர் போலீசில் சம்பந்தப்பட்ட மாணவனின் தாய் மாரியம்மாள் கொடுத்த புகார் மனுவில், 500 ரூபாய் பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டுடன் தனது மகன் மாயமாகி விட்டதாக கூறி உள்ளார். நகை, பணம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
இருந்த போதிலும் வாட்ஸ் அப்பில் மாணவனுடன் இருக்கும் ஆசிரியை தொடர்பான தகவல்களை போலீசார் திரட்டி வருகிறார்கள். 2 பேரும் காதலர்களாக வெளியூர் சென்றிருப்பதை உறுதி செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆசிரியையுடன் மாணவன் சென்றிருப்பது உறுதி ஆனால், அவர்கள் எங்கே உள்ளார்கள் என்பதை கண்டுபிடித்து, மீட்டு வருவதற்கு தேவையான நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளார்கள்.

ஆசிரியை, மாணவன் விபரீத காதல் பிரச்சினை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment