கடையநல்லூர் மாவடிக்கால் பத்திரகாளி அம்மன் கோவில் தை திங்கள் கொடை விழா நாளை 2–ந்தேதி தொடங்கி 5–ந்தேதி வரை நடக்கிறது.

விழாவையொட்டி நாளை காலை 10 மணிக்கு குற்றாலம் தீர்த்தம் எடுத்து வருதல், பகல் 2 மணிக்கு செண்பக விநாயகருக்கு கும்பாபிஷேகம், 3 மணிக்கு அம்மனுக்கு கும்பாபிஷேகம், இரவு 8 மணிக்கு கெங்கையில் இருந்து அம்மன் அழைத்தல், 9 மணிக்கு வில்லிசை, 10 மணிக்கு கரகாட்டம், 12 மணிக்கு அம்மன் அழைத்தல், 1 மணிக்கு அம்மன் ரதவீதி உலா நடக்கிறது.

3–ந்தேதி பகல் 1 மணிக்கு கும்பாபிஷேகம், மாலை 6மணிக்கு முளைப்பாரி எடுத்தல் ஊர்வலம், நள்ளிரவு 3 மணிக்கு மாவிளக்கு எடுத்தல் நடக்கிறது. 4–ந்தேதி இரவு 10 மணிக்கு அம்மன் வீதிஉலா, 10–30 மணிக்கு கரகாட்ட நிகழ்ச்சி நடக்கிறது. 5–ந்தேதி இரவு 9மணிக்கு திரைப்பட இன்னிசை கச்சேரி நடக்கிறது.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment