மக்கா நகர் கிளை சார்பாக நிலவேம்பு கசாயம் வினியோகம் !.

கடையநல்லுரில் நிலவேம்பு கசாயம்
15வது முகாம்மை 33வது வார்டு mc
முத்துக்கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்கா நகர் கிளை சார்பில் நில வேம்பு கசாயம் தயார் செய்து கடையநல்லூர்கிருஷ்ணாபுரத்தில்
வழங்கப்பட்டது.

தற்போது மேற்கு தொடர்ச்சி மலை அருகில்
அமைந்துள்ள நகரங்களான ராஜாபாளையம், சிவகிரி,வாசுதேவநல்லூர், புளியங்குடி கடையநல்லூர் ஆகிய ஊர்களில் டெங்கு மற்றும் விஷக் காய்ச்சல் பரவுதை தடுக்கின்றன விதத்தில் சமுதயா நலன் கருதி இன்று காலை 7 மணியளவில் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பஸ் நிலையத்தில் நிலவேம்பு மூலிகைகளால் தயார் செய்யப்பட்ட மூலிகை சாரை பொது மக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்காநகர் கிளை சார்பில் வழங்கபட்டது 15வது முகாமை திரு முத்துக்கிருஷ்ணன் Mc தொடங்கி வைத்தாரர் இம்முகாமில் கிருஷ்னாபுரத்தை சார்ந்த 2000 பேருக்கு நில வேம்பு கசாயம் வினியோகிக்கப்பட்டது.

இதுவரை கடையநல்லூர் நகர் பகுதியில் நடத்தப்பட்ட 14 நிலவேம்பு கசாய முகாம்கள் மூலம் 35000 க்கும் மேற்பட்ட பெதுமக்கள் பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியில்
மக்கா நகர் கிளை நிர்வாகிகள் அப்துல்லாஹ்குட்டி,சிராஜ்,அப்துல்காதர்
சேஹனா ,முஹைதின்பிச்சை ,மற்றும் மாவட்டதுனை செயலாளர் ஜாஹிர் ,குறிச்சிசுலைமான் ஆகியோர்கலந்து கொண்டனர்.

இதற்கானஏற்பாடுகளை மருத்துவர் அணி மைதீன் தொண்டர்அணி நாகூர் மாணவர்அணி அய்மன் ஆகியோர் செய்திருந்தனர்.

எல்லாஹ் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே
தகவல் குறிஞ்சி சுலைமான்




உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment