கடையநல்லூர் அருகே உள்ள மேலகடையநல்லூரை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 29). இவரது மனைவி கற்பகம் என்ற கவிதா. தர்மராஜ் கடந்த 3 வருடமாக வெளிநாட்டில் வேலை செய்து விட்டு சமீபத்தில் தான் ஊர் திரும்பி இருந்தார்.
இந்தநிலையில் தர்மராஜீக்கும், அவரது மனைவி கவிதாவுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த கவிதா, கடந்த 3 மாதத்திற்கு முன்பு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.

தர்மராஜ் பலமுறை சமாதானம் செய்தும், கவிதா குடும்பம் நடத்த வர மறுத்துவிட்டாராம். இதனால் மனம் உடைந்த தர்மராஜ், நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment