கடையநல்லூர் அருகே உள்ள கொமந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் திருமலை. இவரது மகள் ரேவதி (வயது 20). இவர் புளியங்குடி பகுதியில் உள்ள கல்லூரியில் பி.ஏ. இறுதி ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 8–ந்தேதி சான்றிதழ் வாங்கி வருவதாக கூறிவிட்டு கல்லூரிக்கு சென்றார். அதன் பிறகு ரேவதியை காணவில்லை. உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் ரேவதியை கண்டுபிடிக்க முடியாததால் அவரது தந்தை திருமலை கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார்.

மாணவி ரேவதியை யாராவது திருமண ஆசை காட்டி கடத்தி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment