தமிழக இந்து-சமய அறநிலையத் துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் (64) நினைவிழந்த நிலையில், மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் தொகுதியைச் சேர்ந்த அமைச்சர் செந்தூர் பாண்டியனுக்கு திங்கள்கிழமை மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இருதயம் செயலிழந்த நிலைக்குத் தள்ளப்பட்டு அடையாறில் உள்ள ஃபோர்ட்டிஸ் மலர் மருத்துவமனையின் தீவிர இருதய சிகிச்சைப் பிரிவில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார்.
அவரது இருதயத்தைச் செயல்பட வைக்கத் தேவையான "மசாஜ்' உள்ளிட்டவற்றை டாக்டர்கள் உடனடியாகச் செய்தனர். இந்த நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அமைச்சர் செந்தூர் பாண்டியன் செவ்வாய்க்கிழமை காலை மாற்றப்பட்டார். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவரது உடல் நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment