கடையநல்லூர் அருகே உள்ள மேல கடையநல்லூரை சேர்ந்தவர் திருமலையம்மாள் (வயது65). இவர் செங்கோட்டை–மதுரை சாலையை கடக்க முயன்றார். அப்போது புளியங்குடியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக திருமலையம்மாள் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் கடைய நல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த புளியங்குடியை சேர்ந்த காஜாமைதீன் என்பவரை கைது செய்தார்.
இதே போல் புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடியை சேர்ந்தவர் செல்லப்பா. இவர் தனது மகன் ராஜ், மருமகள் மல்லிகா ஆகியோருடன் ஒரு காரில் கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வந்து கொண்டிருந்தார். சொக்கம்பட்டி வளைவு பகுதியில் வந்த போது எதிரே வந்த மற்றொரு காருடன் மோதியது.
இதில் செல்லப்பா உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கடையநல்லூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Post a Comment