கடையநல்லூர், டிச.6–
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது47). கொத்தனார். இவரது மனைவி வள்ளி(36). இவர்களுக்கு முப்பிடாதி(18) என்ற மகளும், செல்வம்(10) என்ற மகனும் உள்ளனர். செல்வம் பள்ளிக்கு சென்றுவருகிறான். முப்பிடாதி வீட்டில் இருந்து பீடி சுற்றிவருகிறார்.

இந்நிலையில் அவருக்கு அடுத்தமாதம் திருமணம் நடக்க உள்ளது. திருமண நிச்சயதார்த்தம் இன்றுமாலை நடக்கஇருந்தது. மகளின் திருமணத்திற்காக நகைகள் மற்றும் திருமணசெலவுக்கு முருகன் பலஇடங்களில் பணம் ஏற்பாடு செய்தார். ஆனால் திருமணத்திற்கு தேவையான பணம் அவருக்கு கிடைக்கவில்லை.

இதனால் கடந்த சில நாட்களாகவே முருகன் மனம் உடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று அவரது குடும்பத்தினர் கோவிலுக்கு சென்றுவிட்டனர். முருகன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்தார். மகளின் திருமணத்திற்கு போதிய பணம் இல்லாததால் மனம்உடைந்து முருகன் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment