கடையநல்லூர், நவ. 18–
கடையநல்லூர் சொக்கம்பட்டி காந்தாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 30). நேற்று இவர் சொக்கம்பட்டியில் இருந்து புளியங்குடிக்கு பைக்கில் சென்றார்.

சொக்கம்பட்டி புறக்காவல் நிலையத்தை தாண்டி செல்லும்போது அவருக்கு போன் அழைப்பு வந்தது. இதையடுத்து அவர் செல்போனில் பேசியபடி பைக்கை ஓட்டினார். அப்போது நிலைதடுமாறியதில் ரோட்டோரம் உள்ள புளியமரத்தில் பைக் மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் சொக்கம்பட்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முத்தையா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லட்சுமணனை மீட்டு பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமணன் இறந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலியான லட்சுமணனுக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், சந்தனமாரி, இசக்கி என்ற 2 குழந்தைகளும் உள்ளனர்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment