கடையநல்லூர், டிச.23–
கடையநல்லூர் அருகே உள்ள திரிகூடபுரம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் வெள்ளதுரை. இவரது மனைவி காசி நாச்சியார் (வயது 44). வெள்ளத்துரை இறந்துவிட்டதால் காசிநாச்சியார் தனிமையில் வசித்து வந்தார்.

நேற்று பொட்டல்புதூர் அருகே உள்ள அய்யாவழிகோவிலுக்கு சென்றார். இன்று காலை அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது முன் பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் தங்க சங்கிலி, 200 கிராம் வெள்ளி, ரூ.2 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து சொக்கம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment