எனது தலைக்கு ரூ.7 லட்சம் பேரம் பேசியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என தொல்.திருமாவளவன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
 

 
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மதுஒழிப்பு மகளிர் மாநாடு திருச்சி கண்டோன்மெண்ட் அருகே உள்ள கற்பக ரட்சகி  மஹாலில் நடைபெற்றது. அப்போது, இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், தலித் மக்கள் வாழும் பகுதிகளில்தான் அதிக அளவு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இந்த சமூகத்தை குடிக்வைத்து கெடுத்துவிட்டார்கள். எனவே, இதை உடனே தடுக்க வேண்டும்.
 
தொல்.திருமாவளனை கொலை செய்தே ஆகவேண்டும் என்றும், தலையை எடுக்க வேண்டும் என்றும், அப்படி எடுத்தால் ரூ. 7 லட்சம் தருவதாக ஒரு கும்பல் வாட்ஸ் ஆப்பில் செய்தி பரப்புகிறது.
 
கடந்த பத்து வருடங்களுக்கு முன்னால் என் தலைக்கு ரூ. 5 கோடி என அறிவித்தாரகள். அப்போதும் நான் பயப்படவில்லை. இப்போதும் பயப்படவில்லை. எதையும் சந்திக்க தயராகவே உள்ளேன் என்றார்.
 
இந்த தகவல் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், திருமாவளனுக்கு தொண்டர்கள் படை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment