விழுகின்ற போதலெல்லாம்
எழுகின்ற ஆற்றலை கொடுக்கின்ற
அல்லாஹ்விற்கே எல்லா புகழும்.....

15ஆண்டுகளுக்கு மேலாக மறுக்கப்படும் உரிமை. 1992 இல் அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கான போராட்டங்கள் மற்றும் ஆர்பாட்டங்கள் இன்று அளவும் தமிழகத்தில் மட்டும் வீரியமாக நடைபெறுவது சமுதாய சிந்தனையை அதிகப்படுத்தினாலும்....

(மறு பக்கம்)
குறிப்பாக நெல்லை மாவட்டம் தென்காசியில் பஜார் பள்ளியின் நிலைமை கேள்விக்குறியாக தான் உள்ளது.




முஸ்லிம்களுக்கு சொந்தமான இடத்தில் பள்ளியை கட்டுவதற்க்கு உச்சநீதீ மன்றம் அனுமதி கொடுத்தும் மாவட்ட கலெக்டர் கட்டுவதற்க்கான அனுமதியை வழங்கிய பின்பும் ஒரு சில பாசிச சக்திகளால் இன்று அளவும் முஸ்லிம்களே பள்ளியை கட்டி பார் தென்காசியில் என்ற சவால் இருந்து கொண்டுதான் இருக்கிறது.


இதே தென்காசியில் டிசம்பர் 6க்கான ஆர்பாட்டங்கள் வீரியமாக நடத்தும் அமைப்புகள் கூட இந்த பஜார் பள்ளியில் மெளனம் காப்பது எங்களை மாதிரி இளைஞர்களுக்கு இயக்கங்கள் மீது உள்ள நம்பிக்கையை இழக்க செய்து...


இங்கே உள்ள பஜார் பள்ளியை கட்ட முடியல்லை......?
அயோத்தில் உள்ள பாபர் மசூதியை
எப்படி மீட்பார்கள் என்ற சந்தேகம் எழுகிறது.

நேற்று இரவு பெய்த மழையால் பஜார் பள்ளியில் தண்ணீர் தொழுகை இடத்தில் முமுவதுமாக தேங்கி கிடந்து தொழுகை அன்று நடைபெற வில்லை என்பது உணர்வு உள்ள உணர்ச்சி உள்ள இஸ்லாமியனாக ஏற்று கொள்ள முடியவில்லை.

எந்த இயக்கங்களையும் ஜனநாயகம் அப்பாற்பட்டு கட்ட சொல்லவில்லை"
ஜனநாயகம் அடிப்படையில் நீதிமன்றம் உத்தரவு இருந்தும் கட்டுவதற்க்கான பொருளாதாரம் இருந்தும் ஏன் தயக்கம்"


அன்று திட்டம் தீட்டினார்கள் பாபர்மசூதியை இழந்தோம்"
தெருவில் இரண்டு மணி நேரம்
காவல்துறை அனுமதியோடு
கத்துக்கிறோம்" இன்று பஜார் பள்ளியைகட்டவிடாமல் மழையில் விழுந்துவிடும் என்று அமைதி காக்கிறார்கள்


அதற்கான நேரம் வந்து விட்டது. பல போரட்டங்களையும் ஆர்பாட்டங்களையும் கண்ட அமைப்புகளுக்கு தென்காசி பஜார் பள்ளி கண்ணுக்கு தெரியவில்லையா.....?

இல்லை தொழுகை நடைபெறுவது
தெரியவில்லையா...?

சமுதாய சிந்தனை உள்ள
அமைப்புகள் தென்காசியில்
இருக்கிறதா......?

இல்லை டிசம்பர் 6க்கான போரட்டம் தென்காசியில் எந்த
நோக்கத்திற்காக என்ற கேள்வியை ஜனநாயகம் அடிப்படையில் முன்வைப்போம்.

-தென்காசியில் இருந்து ஒரு நண்பரின் குமுறல்



உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment