பரசுராமபரம் தெருவைச் சேர்ந்த ஒரு சகோதரர் குடும்பத்தார்கள் கவனிக்காமல் கைவிடப்பட்ட நிலையில் மனம் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறி யானைக் கொட்டகையில்
மிகவும் அசிங்கமாக மலம் கழித்தவாறு உடம்பெல்லாம் அறுவறுப்பான முறையில் அங்கேயே இருந்திருக்கிறார்.


இச் செய்தி அறிந்த தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை சகோதர்கள் அவரை சுத்தம் செய்து குளிப்பாட்டி, ஆம்புலன்ஸ் மூலம் அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.


அல்லாஹ்வை வணங்குங்கள்! அவ னுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்பவரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.(4:36)
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.(4:1)




உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment