மனநிறைவை பெற்றுத் தந்த மாற்று மத தாவா :
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக இன்று (19-01-15) மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு கடையநல்லூர் அரசினர் மகளிர் உயர்நிலைப்
பள்ளி அருகே வைத்து மாபெரும் "இலவச புத்தகம் விநியோகம்" நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாற்று மத சகோதரர்கள் இஸ்லாம் குறித்த சந்தேகங்களை அறிந்து கொள்ளும் வகையிலான ஏராளமான புத்தகங்கள் மற்றும் குறுந்தகடுகள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது.

மேலும் மாற்று மத அன்பர்கள் இதில் ஆர்வமாகவும், பெருந்திரளாகவும் கலந்து கொண்டனர். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும், இன்ன பிற
சந்தேகங்களுக்கும் சகோதரர்கள் அழகிய முறையில் பதிலளித்தனர்.

மேலும் இஸ்லாத்தை அறிந்து கொள்ளும் ஆர்வமுடைய சகோதர, சகோதரிகளுக்கு திருக்குர்ஆன்அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

மேலும் பொது மக்களுக்கும் தாவா செய்யப்பட்டது. அவர்களுக்கு "இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை" "மாமனிதர் நபிகள் நாயகம்" "உலக அதிசயம் திருக்குர்ஆன்" போன்ற தலைப்புகளில் துண்டுப்பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டது.

இறுதியாக மாலை 6.30 வரை நடைபெற்ற
நிகழ்ச்சியில் 150 ற்கும் மேற்பட்ட புத்தகங்கள்,
அதிகமான குறுந்தகடுகள், 1000 ற்கும் மேற்பட்ட
துண்டுப் பிரசுரங்கள் மற்றும் பல திருக்குர்ஆன்கள் மாற்று மத சகோதர, சகோதரிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு தாவா செய்யப்பட்டது.

இதனை கிளை நிர்வாகம் சிறப்பாக
ஏற்பாடு செய்திருந்தனர்.
எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே...

















உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment