கடையநல்லூர் அருகே உள்ள திரிகூடபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது40) விவசாயி. இவர் சொக்கம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த கருத்தப்பாண்டி என்பவர் மகேஸ்வரனிடம் மது குடிக்க பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் அருகே கிடந்த இரும்பு கம்பியால் மகேஸ்வரனை தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த மகேஸ்வரன் கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கருத்தப்பாண்டியை கைது செய்தனர்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment