கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவரது நண்பர் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சுப்பையா (வயது27). இவர்கள் இருவரும் பைக்கில் கடையநல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த மினிவேன் பைக் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த சுப்பையா பாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment