கடையநல்லூர் பஸ் நிலையம் அருகே அண்ணாமலைநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் தெப்பக்குளத்தில் இன்று காலை பெண் பிணம் மிதந்தது. இது குறித்த தகவல் அறிந்ததும் கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்–இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்து கிடந்தவர் குறித்து விசாரிக்கும் போது அவர் கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் வடக்கு இல்லத்தார் தெருவை சேர்ந்த அய்யாபிள்ளை மனைவி சுப்புலட்சுமி (வயது 40) என்பதும் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரை அய்யாபிள்ளை மற்றும் அவரது உறவினர்கள் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் இன்று அவர் தெப்பக்குளத்தில் பிணமாக மிதந்தார். அவர் தெப்பக்குளத்தில் இறங்கி குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment