திசை மாற செய்தால்
நான் என்ன செய்வேன் ?
நீ என்று தடுத்தாய்?
காதல் படக் காட்சி
கலக்கத்தை தந்தால்
நான் என்ன செய்வேன் ?
நீயும் தான் பார்த்தாய்.
நீ வைத்த தொலைக்காட்சி
தொலைநோக்கில் கவர்ந்தால்
நான் என்ன செய்வேன் ?
நீதானே வைத்தாய்.
தப்பென்று தெரியாமல்
தப்புக்கள் தெரிந்தால்
நான் என்ன செய்வேன் ?
சிறு பிள்ளை தானே.
திருக்குறளை தந்தாய்
திருக்குரான் மறந்தாய்
நான் என்ன செய்வேன் ?
உன் சொல்லை கேட்டேன்.
பல ஆண்டு காலம்
பாசத்தை கேட்டேன்.
சிறிதளவு காட்டி
சிறைப்படுத்திவிட்டான்.
நான் என்ன செய்வேன் ?
நீ அழுது பார்த்தேன்
நீ தொழுது இல்லை
நான் என்ன செய்வேன் ?
உனை பார்த்து வளர்ந்தேன்.
ஹதீஸ் கேட்க அழைக்கவில்லை
சதீஸ் என்னை அழைத்து சென்றான்
நான் என்ன செய்வேன் ?
நீ செய்த தவறு.
உனை குற்றம் கூற
எனக்காசை இல்லை
நான் என்ன செய்வேன் ?
என் குற்றம் தீர.
உன் பிள்ளை போல
என் பிள்ளை இல்லை
திருகுரான் படிப்பாள் !
தீயதை தடுப்பாள் !
தினந்தோறும் தொழுவாள் !
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment