கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் சந்தனமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகையா மனைவி பூமாரி. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் மகேஷ் (17). கடந்த மார்ச் 18ம் தேதி காலை பூமாரி வேலைக்கு சென்று விட்டார். மாலையில் வீடு திரும்பிய போது மகளை காணவில்லை. பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் பூமாரி கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்& இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி வழக்குப்பதிவு செய்து மாயமான மகேஷை தேடி வருகிறார்.




உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment