கடையநல்லூர், :கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட விஸ்வநாதபேரி உபமின்நிலையத்தில் இன்றும்(6ம் தேதி) நாரணபுரம் உப மின்நிலையத்தில் நாளையும்(7ம்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இப்பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட விஸ்வநாதபேரி உபமின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்குசத்திரம், வடக்குசத்திரம், வழிவழிகுளம், இராயகிரி, வடுகப்பட்டி, மேலகரிசல்குளம் மற்றும் கொத்தாடைப்பட்டி ஆகிய கிராமங்களிலும், நாளை நாரணபுரம் உபமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தரணிநகர், வாசுதேவநல் லூர், சங்கனாபேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழபுதூர், நெல்கட்டும்செவல், சுப்பிரமணியபுரம், உள்ளார், வெள்ளாளங்கோட்டை மற்றும் தாருகாபுரம் ஆகிய கிராமங்களிலும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment